‘புனித’ நீராடும் விழாவாம் – புடலங்காயாம்!

1 Min Read

நீரில் மூழ்கி 43 பேர் மரணம்!

பாட்னா, அக்.24 பீகாரில் நீர் நிலையில் நீராடி வழிபடும் ‘ஜிவித்புத்ரிகா’ விழாவின்போது, பல்வேறு மாவட்டங்களில் 37 சிறார்கள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்தது.
தங்கள் குழந்தைகளின் நலனுக்காக தாய்மார்கள் விரதமிருந்து, நீா்நிலைகளில் நீராடி வழிபடும் ‘ஜிவித்புத்ரிகா’ விழா, பீகாரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் ஆறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் குழந்தைகளுடன் பெண்கள் நீராடி, கரையோரத்தில் வழிபாடு நடத்தினர்.

இவ்விழாவின்போது, கிழக்கு-மேற்கு சாம்பரன், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், சரண், பாட்னா, வைஷாலி, முஸாஃபர்நகர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 37 சிறார்கள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணி நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜிவித்புத்ரிகா’ விழாவில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *