திருவனந்தபுரம், அக்.21 திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வெண்கலப் பாத்திரத்தைத் திருடிய குற்றச்சாட்டில் மருத்துவர் உள்பட 4 பேரை ஹரியாணாவில் கேரள காவல் துறையினர் கைது செய்தனர்.
பத்மநாப சாமி கோயிலில் பல்வேறு பூஜைகளின்போதும், சடங்குகளின்போதும் ‘உருளி’ என்று அழைக்கப்படும் விலைமதிப்பற்ற வெண்கலப் பாத்திரம் பயன்ப டுத்தப்பட்டு வந்தது. இந்த உருளி அண்மையில் திருடுபோனதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தது. அதன்பேரில் காவல் துறையினர் பத்மநாப சாமி கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, குற்ற வாளிகளை அடையாளம் கண்டனர்.
உருளி திருட்டில் தொடர்புடை யவர்கள் அரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது கேரள காவல்துறையினருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அரியானா சென்ற கேரள காவல் துறையினர், உள்ளூர் காவல் துறையினர் உதவியுடன் 4 பேரைக் கைது செய்து காவலில் எடுத்தனர். மருத்துவரை மட்டும் திரு வனந்தபுரத்துக்கு அழைத்து வந்து, கேரள காவல்துறை விசாரணை நடத்தி யதில் அவர் திட்டமிட்டு திருடாதது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதி காரி ஒருவர் கூறுகையில், ‘உருளி திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆஸ்தி ரேலிய குடியுரிமை பெற்ற மருத்துவர் குடும்பத்தினருடன் பத்மநாப சாமி கோயிலுக்கு கடந்த வாரம் வந்துள்ளார். பாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து அறியாமல் எடுத்துச் சென்றதாகவும், யாராவது ஆட்சேபம் தெரிவித்திருந்தால் அங்கேயே திருப்பி அளித்திருப்பேன் என்றும் காவல்துறை விசாரணையில் மருத்துவர் தெரிவித்தார். இதில் உண்மை இருப்பதாகக் கருதுவதால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றப்பிரிவுகளைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.