தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படுவாரா?

2 Min Read

சென்னை, அக்.21 தமிழ்நாடு ஆளுநர்
ஆர்.என். ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய ஆளுநராக தமிழ்நாட்டிற்கு நன்கு பரீட்சயமான மேனாள் ஒன்றிய அமைச்சரான வி.கே. சிங் நியமிக்கப்படலாம் என்று பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான்
சென்னை சாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் ஹிந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது.

இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பேசினார். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் விடுபட்டுப் போனது. இது சர்ச்சையை கிளப்பியது.
இந்த விடயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி ஆளுநர் ஆர்.என். ரவியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.
அதாவது ஆர்.என். ரவி நாகலாந்தில் 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்தார். அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆளுநராக நீடித்து வருகிறார். இதற்கிடையே தான் நீண்ட காலமாக ஆளுநராக பொறுப்பு வகித்து வருபவர்களை மாற்றம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கேரளா, ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர்களை மாற்றம் செய்யும் திட்டம் ஒன்றிய அரசிடம் உள்ளதாம்.

அதன்படி விரைவில் ஆளுநர்
ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆளுநர்
ஆர்.என். ரவிக்குப் பதில் மேனாள் ஒன்றிய அமைச்சர் வி.கே. சிங்கை புதிய ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் மேனாள் இந்திய ராணுவ படைத் தலைவராக பொறுப்பு வகித்தார். ராணுவ ஜெனரலான இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு பா.ஜ.க.வில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *