பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பட்டமளிப்பு விழாவில் டி.எம்.கிருஷ்ணாவிற்கு ‘முனைவர் பட்டம்!’

Viduthalai
1 Min Read

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 32 ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறந்த கருநாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் கட்டுரையாளர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது. உடன் இந்திய வருவாய் பணி ஆணையர் எஸ்.மருதுபாண்டியன், பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், பேரா.எம்.தவமணி, காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முதன்மையர் எம்.ஜி.சேதுராமன், அறக்கட்டளையின் மருத்துவர் சு.நரேந்திரன், துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன், பதிவாளர் பி.கே.சிறீவித்யா ஆகியோர் உள்ளனர். இந்திய வருவாய் பணி ஆணையர் எஸ்.மருதுபாண்டியன் அவர்களுக்கு, வேந்தர் கிவீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் (தஞ்சை, வல்லம், 19.10.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *