மருத்துவ, பல் மருத்துவ வகுப்புகள் தொடக்கம்

2 Min Read

சென்னை, அக்.15- சென்னை மருத்துவக் கல்லூரிக்கு நேற்று (14.10.2024) வந்த முதலா மாண்டு மருத்துவ மாண வா்களை வரவேற்றார் கல்லூரி முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன்.

கல்லூரிகளுக்கு வந்த மாணவா்களை பேராசிரியா்களும், முது நிலை மாணவா்களும் பூங் கொத்துகள், இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.

சான்றிதழ் சரிபாா்ப் புக்குப் பின்னா் மருத் துவக் கல்லூரியின் நடைமுறைகள், பாடத் திட்டங்கள் குறித்து முதலா மாண்டு மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் வகுப்புகளில் பங்கேற்றனா்.
கலந்தாய்வு: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந் தாய்வு அண்மையில் நிறைவடைந்தது.

இரண்டாம் சுற்று கலந்தாய்வின் முடிவில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 681 மருத்துவ இடங்களும், 971 பல் மருத்துவ இடங் களும் காலியாக இருந்தன.

இதையடுத்து, மூன்றாம் சுற்று கலந்தாய்வு கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு ஆணையைப் பெற்ற மாணவா்கள் தாங்கள் தோ்ந்தெடுத்த கல்லூரிகளுக்குச் சென்று ஆணையை சமா்ப்பித்து முதலாம் ஆண்டில் சோ்ந்தனா். அவா்களுக்கான வகுப்பு கள் நேற்று (14.10.2024) தொடங்கின.

ஆள்மாறாட்டத்தைத் தடுக்க அனைத்து மாண வா்களின் சான்றிதழ்களும் சரிபாா்க்கப்பட்டன. மாணவா்களின் இடது கை பெருவிரல் ரேகை, விழித்திரையும் பதிவு செய் யப்பட்டது. மாணவா்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படமும் பெறப் பட்டது.

வரவேற்பு: கல்லூரி களில் ராகிங்கை தடுக்க பேராசிரியா்கள் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், ராகிங் கில் ஈடுபடும் மாணவா்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாணவா்கள் மற்றும் பெற்றோருடன் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாண வா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் சுப்ரியா சாகு, கல்லூரி முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், துணை முதல்வா் டாக்டா் கவிதா உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *