பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்த சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

சென்னை, ஆக. 1- சோழிங்க நல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகர், சுண்ணாம்புக் கொளத் தூரில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் ஆனந்தன் அலுவலகத் தில் 30.07.2023 ஞாயிறு முற்பகல் 11.00 மணியள வில், நடைபெற்றது.

சோழிங்கநல்லூர்  மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர் களாக தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், மற்றும் கழக அமைப்புச் செயலா ளர் வி. பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர். 

மாவட்டச் செயலா ளர் ஆ.விஜய்உத்தமன் ராஜ் வரவேற்புரை நிகழ்த் தினார், மேலும் மாவட் டக் கழக பொறுப்பாளர் கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துகளை முன்வைத்தனர். 

மாவட்ட பகுத்தறிவா ளர் கழக தலைவர் ஆனந் தன் நன்றியுரை ஆற்றினார். 

இறுதியாக பங்கேற்ற அத்துணை தோழர்களுக் கும் மதிய உணவாக சுவையான பிரியாணி வழங்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டம் இனிதே மிகச் சிறப்பாக நடந்தேறியது. கலந்து கொண்ட தோழர்களின் கருத்து களை ஏற்று சிறப்பான மூன்று முத்தான தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டது.

மாவட்டத்திற்கு உட் பட்ட பகுதிகளான காம ராஜபுரம், சுண்ணாம்பு குளத்தூர், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், மடிப் பாக்கம், ஆலந்தூர், ஆதம் பாக்கம், நங்கநல்லூர், நீலாங்கரை, மற்றும் கேளம்பாக்கம் ஆகிய அனைத்து பகுதிகளின் மய்யப்பகுதிகளிலும் கழகக் கொடியேற்றுவது எனவும், எதிர்வரும் 7.8.2023 அன்று, பாலவாக் கத்தில் கலைஞர் நூற் றாண்டு விழா, வைக்கம் நூற்றாண்டு விழா மற் றும் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் மனி தாபிமானமற்ற சம்பவத் தினை கண்டித்து, நிகழ்வை கண்டன கூட்டம் நடத் துவது எனவும், மாவட்ட அளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத் துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *