மதுரை தோழர் முருகேசன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

Viduthalai
1 Min Read

மதுரை, அக். 7- மதுரை மாநகர் சி.எம்.ஆர் ரோடு பகுதி கழக பொறுப்பாளரும் பழம்பெரும் சுயமரியாதை வீரருமான பா.முருகேசன் (54) கடந்த 5.10.2024 இரவு 9 மணிக்கு உடல்நலமின்மையால் காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வு 6.10.2024 ஞாயிறு பகல் 1.30 மணியளவில் நடைபெற்றது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு மற்றும் மாநில செயலாளர் சுப. முருகானந்தம், மாவட்ட கழக காப்பாளர், தே. எடிசன் ராஜா, சே.முனியசாமி, இரா.லீ.சுரேஷ் மாவட்டச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர் க. சிவா, தனுஷ்கோடி, மதுரை மாவட்ட துணைத்தலைவர் பவுன் ராஜ், பேக்கரி கண்ணன் ,ஆட்டோ செல்வம், மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி, தனசேகரன் எபினேசர் வேல்துரை மாரிமுத்து மணிராஜ், முரளி, சுப்பையா, போட்டோ ராதா ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *