ஜெகன் மோகன்
அமராவதி, அக். 6- ‘திருப்பதி லட்டு விவகாரத்தில் முதலமைச்சா் சந்திரபாபு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்அய்டி) உச்சநீதிமன்றம் நிராகரித்தன் மூலம் அவரது உண்மை முகம் அம்பலமாகியுள்ளது’ என்று ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் தலைவா் ஜெகன்மோகன் தெரிவித்தார்.
மேலும், திருப்பதி லட்டு குறித்து பொய்களைப் பரப்பிய சந்திரபாபு, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினார்.
ஆந்திர தலைநகா் அமராவதியில் செய்தியாளா்களிடம் ஜெகன்மோகன் கூறியதாவது:
“கடவுளை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சந்திரபாபு என்னனென்ன பேசினாரோ, அவை அனைத்தையும் கண்டிக்கும் வகையி லேயே உச்சநீதிமன்றத்தின் கருத்துகளும் உத்தரவுகளும் அமைந்துள்ளன.
அவரால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அவருக்கு உண்மை யிலேயே கடவுள் பக்தி இருந்தால், பொய்களை பரப்பியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.