தமிழ் நாடு அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் சா.மு.நாசர் அவர்களை 30-09-2024 திங்கட்கிழமை காலை 08-00 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் கழகத் தோழர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பயனாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தனர். உடன் மாவட்ட செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், ஆவடி நகர தலைவர் முருகன், செயலாளர் தமிழ் மணி, துணை தலைவர் சி.வச்சிரவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், துணை தலைவர் ஜெயராமன், மற்றும் தோழர்கள் பேபி, வை.கலையரசன், பழ.நல்.முத்துக்குமார் பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.