சரக்கு போக்குவரத்து சேவையில் கால் பதிக்கும் தமிழ்நாடு அரசு

1 Min Read

சென்னை, செப்.23 தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை மேற்கொள்ள, அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு நிறுவனத்தை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இழப்பில் இயங்கி வருகின்றன. எனினும், மகளிருக்கு இலவச பேருந்து, முதியோர்களுக்கு இலவச பேருந்து அட்டை, மாணவர்களுக்கு இலவச பயணம் என திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த இழப்புகளைச் சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி விழாக்களில் கலந்து கொள்வதற்கும், சுற்றுலா தளங்களுக்கு செல்லவும் ஒப்பந்த ஊர்தி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்க உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *