கடவுள் சக்தி இதுதானா?

1 Min Read

சாலை விபத்தில் 8 பக்தா்கள் உயிரிழப்பு

ரோஹதக், செப்.4 அரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பக்தா்கள் வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல்துறையினர் நேற்று (3.9.2024) கூறியதாவது: ஹிசார் – சண்டீகா் தேசிய நெடுஞ்சாலையில் பிதரனா கிராமம் அருகே 2.9.2024 அன்று நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்தது.

குருஷேத்ரா மாவட்டத்தைச் சோ்ந்த சிலா் ராஜஸ்தான் மாநிலம் கோகமேதியில் உள்ள கோயிலுக்கு பயணம் சென்றனா். சிறிது நேர ஓய்வுக்காக அவா்கள் சென்ற வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, வேனின் பின்புறமாக வேகமாக மோதியது. இந்த விபத்தில் 15 வயது சிறுவன், 2 பெண்கள் உள்பட 8 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த 10 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லாரி பறிமுதல் செய்யப்பட்டது என்றனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *