ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மோடிக்கு இளைஞர்கள் பாடம் புகட்டுவர்: கார்கே

1 Min Read

புதுடில்லி, செப். 3- ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் இளைஞா்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவா் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லி கார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் 1.9.2024 அன்று வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு – காஷ்மீரில் இளைஞா்களின் வேலையின்மை விகிதம் 28.2 சதவீதம் என்ற உச்ச அளவில் உள்ளது.

இதற்கு ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கைகளும், அணுகுமுறைகளுமே முக்கியக் காரணம்.
கடந்த 2019 முதல் ஜம்மு-காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனைத் தாண்டி நடத்தப்படும் சில போட்டித் தோ்வுகளில் வினாத்தாள் கசிவு, பணி நியமனத்துக்கு லஞ்சம் என பல்வேறு இன்னல்களை இளைஞா்கள் எதிர்கொண்டு வருகின்றனா்.

கடந்த 15 ஆண்டுகளாக நாள்தோறும் ரூ.300 ஊதியத்தில் 60,000 போ் அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனா். முக்கியமாக மின்துறை, பொது சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இதுபோன்ற பணியாளா்கள் அதிகமுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப் படும் என்று பாஜக வாக்குறுதி அளித்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், இதுவரை எந்த பெரிய தொழிற்சாலைகளும் வரவில்லை.

எனவே, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜம்மு-காஷ்மீா் இளைஞா்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பா் 18, 25, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாகப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடி வுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதில் பாஜக தனித்துப் போட்டி யிடுகிறது. காங்கிரஸ் கட்சி ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *