மாந்திரீகம் என்று கூறி 36 சவரன் தங்க நகைகள் திருட்டு – ஆசாமி கைது

1 Min Read

ஓசூர், செப். 2- கொலை, கொள்ளை வழக்குகளில் சிறை சென்று திரும்பி, மாந்திரீகம் படித்து மந்திர வாதி ஆவதற்காக 35 சவரன் தங்க நகைகளை திருடிய முதியவரை காவல் துறை யினர் கைது செய்தனர்.

ஓசூர் நேரு நகரைச் சேர்ந்த பூபதி என்பவர் குடும்பத்துடன் கோவி லுக்கு சென்று விட்டு, வீடு திரும்பியபோது, வீட்டில் பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப் படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், தருமபுரி மாவட்டம், நரசய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த 76 வயதான முகமது சித்திக் என்ற பொன்னுச்சாமியை கைது செய்தனர்.

பூபதியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து தங்க நகைகளை திருடிய பொன்னுசாமி, ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும், மாந்திரீகம் படித்து மந்திரவாதி ஆவதற்காக இந்த திருட்டு நிகழ்வில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிட மிருந்து 35 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *