வதோதரா, ஆக.28 தெற்கு குஜராத் பகுதியில் பெய்துவரும் மழையால் போடெலி-சோட்டா உதய்பூர் சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. மகிசாகர் மாவட்டத்தின் பமன்வாடா கிராமத்தில் மழையின் காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரு இணையர் உயிரிழந்தனர். 26.8.2024 அன்று அவர்களது வீட்டின் சுவர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது. உயிரிழந்தவர்கள் லட்சுமண படேலியா (45) மற்றும் அவரது மனைவி கைலாஷ் (42) என அடையாளம் காணப்பட்டனர். போடெலிக்கும் சோட்டா உதய்பூருக்கும் இடையிலான பாலம் மாநிலத்தை மத்தியப்பிரதேசத்தின் அலிராஜ்பூருடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. ஆற்றின் அடிப்பகுதியில் உள்ள தற்காலிக மாற்று வழிக்கும் பாரஜ் ஆற்றின் கொந்தளிப்பால் சேதமடைந்தது.