புதுடில்லி, ஆக.27- வங்கிப் பணியாளர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகா சத்தை வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்டித்து வங்கிப் பணியாளா் தோ்வு மய்யம் உத்தர விட்டுள்ளது.
வங்கிப் பணியாளா் தோ்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்று பல்வேறு மாநி லங்களில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள 3,955 அலுவர் பணிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 28.8.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வின் முதல்நிலைத் தேர்வு அக்டோ பரிலும், முதன்மைத் தேர்வு நவரிலும் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.