மேட்டுப்பாளையத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

1 Min Read

மேட்டுப்பாளையம், ஆக.24- மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டுவிழா எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டசெயலாளர் கா.சு.அரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்டதலைவர் சு. வேலுசாமி முன்னிைலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழக சொற்பொழிவாளர்கள் இரா. அன்புமதி,
க. வீரமணி, ஆகியோர் மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு குறித்து தெளிவாக உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரதீப், லியாகத் அலி, ரங்கசாமி, மணி, ரங்கராஜ், ராமச்சந்திரன், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் கோ.அர.பழனிசாமி, தியாகராசன், முத்துச்சாமி, தமிழ்மணி, காரமடை ஒன்றியதலைவர் ஏ.எம்.ராஜா உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
மேட்டுப்பாளையம் மாவட்ட அமைப்பாளர் வீ.செல்வராஜ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *