லக்னோ, ஆக.17- பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சையை மருத்துவமனையின் உதவிப் பணியாளரே (வார்டு பாய்) செய்த அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது.
தனியார் மருத்துவமனையின் இயக்குநர் சஞ்சய் குமாரின் அறிவுறுத்தலின் பேரில்தான் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக வார்டு பாய் கூறியதாகச் சொல்லப்பட்டாலும், சஞ்சய் குமார் இதை மறுத் திருக்கிறார்.
அதோடு, மருத்துவமனை நிர்வாகம் இதில் விசாரணையைத் தொடங்கும் என்றும், அதன் பின்னர் தேவையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் சஞ்சய் குமார் தெரிவித்தார். மறுபக்கம், இந்த விவகாரம் தொடர்பாகக் குழு அமைத்திருப்பதாகக் கூறியிருக்கும் சுகாதாரத்துறை, மருத்துவ பொறுப்பு அதிகாரியொருவரை மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் இத் தகைய செயலுக்கு கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்திருக்கிறது.
மேலும், இது குறித்து காவல் துறையினர், “பஸ்தி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியால் அமைக்கப்பட்ட குழு, இதனை விசாரித்து வருகிறது.
அதேசமயம், காவல் நிலையத்துக்கு புகார் எதுவும் வரவில்லை. அது கிடைத்ததும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக் கின்றனர்.