சுதந்திர நாள் விழாவில் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் பேச்சு : காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

1 Min Read

புதுடில்லி, ஆக.16- சுதந்திர நாள் விழாவில் பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர நாளையொட்டி டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர், “தற்போ துள்ள சிவில் சட்டம் உண்மை யில் ஒரு வகையில் ஒரு வகுப்பு வாத சிவில் சட்டம் என்று சொல்லுவேன். நான் கூறுவது காலத்தின் தேவை. நாட் டில் மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை. அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும்” என்றார். பொது சிவில் சட்டம் குறித்துமோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் எக்ஸ் தளத் தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ள தாவது:-

உயிரியல்ரீதியாக பிறக்காத பிரதமரின் தீய எண்ணங்கள் மற்றும் வரலாற்றை இழிவுப்படுத்தும் திறனுக்கு எல்லையே இல்லை. அது இன்று செங்கோட்டையில் வெட்ட வெளிச்சமானது.

தற்போது வரை வகுப்புவாத சிவில் சட்டம் இருப்பதாக கூறுவது, 1950-களின் நடுப்பகுதியில் இந்து தனிநபர் சட்டங்களில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்த அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும். அந்த சீர்திருத்தங்களை அப்போது ஆர். எஸ்.எஸ். மற்றும் ஜனசங்கம் கடுமையாக எதிர்த்தது.

-இவ்வாறு ஜெய்ராம்ரமேஷ் கூறியுள்ளார்.

இதேபோல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரும் பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *