வேதாரண்யம், ஆக.16- நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச சேர்ந்தவர் சந்திரகாசன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் புஷ்ப வனத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன்(வயது70), ராஜேஷ்(26), ஆறுகாட்டுத் துறையை சேர்ந்த பன்னீர்செல்வம்(50), வேல்முருகன் (36) ஆகிய 4 மீனவர்கள் கடந்த 13ஆம் தேதி ஆறு காட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் கோடியக் கரைக்கு தென்கிழக்கே 15 கடல்மைல் தொலை வில் மீன்பிடித்து கொண் டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் 2 படகுகளில் வந்து கோடியக்கரை மீன வர்களை இரும்பு குழாய்களால் தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகளை பறித்து சென்றனர்.
பின்னர் கரை திரும்பிய மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மீனவர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையினர், கோடி யக்கரை மீனவர்களை தாக்கி வலைகளை பறித்துச்சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.