ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க வழக்கு ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிரான அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை ரத்து

viduthalai
1 Min Read

சிறீநகர், ஆக. 16- ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முறைகேடுகளுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், அந்த யூனியன் பிரதேச மேனாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா உள் ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகையை உயர்நீதிமன்றம் 14.8.2024 அன்று ரத்து செய்தது.

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத் தலை வராக ஃபரூக் அப்துல்லா பதவி வகித்தபோது, அந்த சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஅய்) அளித்த மானியத்தில் ரூ.43.69 கோடிக்கு முறை கேடு நடைபெற்றதாக குற் றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ஃபரூக் அப்துல்லா, அந்த சங்க மேனாள் பொருளாளர்கள் அசன் அகமது மிர்ஸா, மீர் மன்சூர் உள்ளிட்டோர் மீது சிபிஅய் வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர் பான அமலாக்கத் துறை யின் குற்றப் பத்திரிகையில் ஃபரூக் அப்துல்லா, அசன் அகமது , மீர் மன்சூர் உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட் டன. அந்தக் குற்றப் பத் திரிகையை ரத்து செய்யக் கோரி, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் அசன் அகமது, மீர் மன்சூர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், ஆக.7-ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அமலாக் கத் துறையின் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளவர்கள் ஆதா யம் அடையக் கூடிய எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடு படவில்லை என்று கூறி, அந்தக் குற்றப் பத்திரிகையையும், துணை குற்றப் பத்திரிகையையும் ரத்து செய்து நீதிபதி சஞ்சீவ் குமார் 14.8.2024 அன்று உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *