ஒடிசா பிஜேபி ஆட்சியில் சிகிச்சைக்கு வந்த பெண்கள் இருவர் மீது பாலியல் வன்முறை

2 Min Read

புவனேஸ்வரம், ஆக.15- ஒடிசா மாநில அரசு மருத்துவ மனையில், சிகிச்சைக்கு வந்த இரு பெண்களை பாலியல் வன்முறை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவராக இருந்த இளம்பெண் ஒருவர், பாலியல் வன்முறைககு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்ச் சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வை கண்டித்தும், பயிற்சி மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வந்த 2 பெண்களை பாலியல் வன்முறை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-
சிகிச்சைக்கு வந்த பெண்கள்

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது தாய் மற்றும் அத்தையை இதய நோய் சிகிச்சைக்காக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு அந்த மருத்துவமனையின் இதய நோய் பிரிவின் மருத்துவரான தில்பக்சிங் தாக்கூர் சிகிச்சை அளித்தார். பின்னர் அவர்களுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி 2 நாள் கழித்து வருமாறு கூறினார்.
அவர் கூறியபடி அந்த பெண்கள் இருவரும், ஸ்கேன் எடுப்பதற்காக வந்துள்ளனர். இருவரையும், மருத்துவர் தாக்கூர் தனி அறைக்கு அழைத்து சென்றார். ஸ்கேன் அறையில் இருந்த பெண் உதவியாளரையும் வெளியே அனுப்பிவிட்டார்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மாணவியின் தாயும், அத்தையும் தங்களுக்கு உடலில் தாங்கமுடியாத வலி இருப்பதாக கூறினர்.

அவர்கள் இருவரும் அங்கி ருந்த பெண் மருத்துவர் ஒருவர் பரிசோதித்தார். அப்போது அவர்கள் இருவரும் பாலியல் வன்முறை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

“மருத்துவர் தாக்கூர் தான் ஸ்கேன் எடுப்பதாக கூறி தங்களிடம் பாலியல் வன்முறை செய்ததாக அவர்கள் இருவரும் கூறினர். பின்னர் இதுபற்றி காவல்துறையில் புகார் செய்தனர்.

அதன்பேரில் வழக்குப்ப திவு செய்த காவல்துறையினர், மருத்துவர் தாக்கூரை கைது செய்தனர் .
இதனிடையே தன்னை தாக்கியதாக, அந்தபெண்கள் மீதும், அவர்களது உறவினர்கள் மீதும் மருத்துவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றியும் விசாரணை நடை பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *