பெரியார் மணியம்மை மருத்துவமனையின் துணை செவிலியர் பயிற்சி நிறைவு

1 Min Read

பெரியார் மருத்துவக் குழுமத்தின் கீழ் இயங்கும் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் துணை செவிலியர் பயிற்சி நிறைவுற்று அம்மாணவர்களுக்கு இன்று (14.08.2024) சான்றிதழ் வழங்கப்பட்டது.

2023-2024ஆம் கல்வியாண்டில் 16 மாணவர்கள் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் துணை செவிலியர் பயிற்சி பெற்றனர். அவர்களின் பயிற்சி நிறைவுற்றதை தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அம்மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். உடன் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மருத்துவர் பி. மஞ்சுளாவாணி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர்
கோ. கிருஷ்ணமூர்த்தி, செவிலியர்கள் வி. ஹெலன், ரா. காமாட்சி, ஜா. ரகமத் நிஷா மற்றும் ஆர். ஹேமமாலினி உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *