ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை! ஒன்றிய அரசு கைவிரிப்பு!

2 Min Read

புதுடில்லி, ஆக.11 கரோனா தொற்றுக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத டி.ஏ. நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து ஒன்றிய அரசு உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 18 மாத டி.ஏ. நிலுவைத் தொகை பற்றிய மிகப்பெரிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கரோனா தொற்றுக் காலத்தில் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாதங்களாக டிஏ மற்றும் டிஆர் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது.

18 மாத நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது அது குறித்து ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.

ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அல்லது டிஆர் தொகை விரைந்து கிடைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு ஊழியர் சங்கம் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய அகவிலைப்படியை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என ஊழியர் சங்க செயலாளர் சிவகோபால் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர்களான ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சர்மா ஆகியோர் “கரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில் டிஏ-டிஆர் தொகை வழங்கப்படவில்லை. தற்போது இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. அப்படி இருந்தும் ஏன் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவை டிஏ வழங்கவில்லை” என்று கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “கரோனா தொற்று காரணமாக நிதி நிலைமை நன்றாக இல்லை” என்று கூறினார்.
NCJCM உட்பட பல ஊழியர் அமைப்புகள் கோரிக்கை எழுப்பி யிருந்தாலும், தற்போது 18 மாதங்களுக்கான டி.ஏ. நிலுவைத் தொகையை வழங்க முடியாது என்று மறைமுகமாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்கள் தற்போது 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் பெற்று வருகின்றனர்.
ஆனால், கரோனா நோய்த்தொற்றின் போது ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையில் நிறுத்தி வைக்கப்பட்ட டி.ஏ. நிலுவைத் தொகையை தற்போது கொடுக்க முடியாது என தெரிய வந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *