கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

11.8.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் கிரிமிலேயர் முறையை நீக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்கு, மைனாரிட்டி பாஜக அரசு, அரசியல் சட்டத்திருத்தம் மூலம் தடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு. இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட சதி செய்கிறது அரசு என குற்றச்சாட்டு.
< உ.பி. பாஜகவில் முதலமைச்சர் யோகி, துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா இடையே கருத்து வேறுபாடு உச்சக்கட்டம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< ‘ஜாதி இந்தியாவின் ஒருங்கிணைக்கும் காரணி’ என ஆர்எஸ்எஸ்-இணைந்த வார இதழ் ஜாதி அமைப்பை நியாயப்படுத்தி கட்டுரை.
< நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளான பாஜக – ஆர்.எஸ்.எஸ். பீகாரில் பரவிட நிதிஷ்குமார் உதவியுள்ளார். ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் புதிய குற்றச்சாட்டின் படி, செபி அமைப்பின் தலைவர் மாதபி புச்சு மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்ததாக பகிரங்க குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *