புதுடில்லி, ஆக.9 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவிருக்கும் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் பலருக்கு தொலைதூர நகரங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக க்கூறி தேர்வை தள்ளி வைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது ஜூன் மாதம் 23-ஆம் தேதி எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.இளநிலை நீட் தேர்வு விவகாரம் அப்போது பெரிய அளவில் இருந்ததால், தேர்வு நடைபெறுவதற்கு முந்தையநாள் இரவு அந்த தேர்வை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒத்திவைத்தது.
இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவு ஜூன் மாதம் 4-ஆம் தேதி வெளியானது. தேர்வு நடந்ததில் இருந்து தேர்வு முடிவு வெளியானது வரை வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி என பல் வேறு குற்றச்சாட்டுகள் வந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஒரு வழியாக
இளநிலை நீட் தேர்வு முடிவு மீண்டும் வெளியிடப்பட்டு, தற்போது கலந்தாய் வுக்கான பணிகள் தொடங் கியுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவிருக்கும் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் பல ருக்கு தொலைதூர நகரங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்க இருக்கிறது.