2.16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர் திறன்மிக்க இந்தியர்கள் வெளியேறுவது நாட்டிற்கு பெரும் பாதிப்பு எச்சரிக்கிறது காங்கிரஸ்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக.4 2023ஆம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சத்தா, “இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு எவ்வளவு பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அதற்கானகாரணங்கள் என்ன” என்பது குறித்து கேள்வியெழுப்பி இருந்தார்.
இதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை-அமைச்சர்கீர்த்திவர்தன் சிங் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், 2023-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 219 பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இன்றைய அறிவுசார் பொருளாதாரத்தில் உலகளாவிய பணியிட திறனை அரசும் அங்கீகரிக்கிறது. வெற்றிகரமான, வளமையான மற்றும் செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்தோர் இந்தியாவின் சொத்தாக திகழ்கின்றனர். அதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டை காட்டிலும் 2023ஆம் ஆண்டு சற்று குறைந்துள்ளது.
2022ஆம் ஆண்டு 2 லட்சத்து 25 ஆயிரத்து 620 பேரும், 2021ஆம் ஆண்டு 1 லட்சத்து 63 ஆயிரத்து 370 பேரும், 2020ஆம் ஆண்டு 85 ஆயிரத்து 256 பேரும், 2019ஆம் ஆண்டு 1 லட்சத்து 44 ஆயிரத்து 17 பேரும் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *