புதுடில்லி, ஆக. 3- எங்களுக்கு செங்கல்; உங்களுக்கு செங்கோலா? என்று டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி மக்களவையில் கேள்வியெ ழுப்பினார்.
மக்களவையில் கடலுார் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் பேசியதாவது:
சுகாதாரத்துறை மீதான விவா தத்தில் எனக்கு பேச வாய்ப்பு கொடுத்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிதிநிலை அறிக்கையில் ஏழை எளிய மக்கள் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கவில்லை. நான் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலுார் தொகுதியில் சிறப்பு வசதிகளுடன் கூடிய ஒன்றிய அரசு மருத்துவமனை ஒன்று கட்டித்தரவேண்டும்.
கடலுார் மாவட்டத்தில் ஒன்றிய அரசு மருத்துவமனை இல்லை. இங்கு ஒரு மருத்துவமனை அமைத்துக் கொடுத்தால், அந்த மாவட்டத்தைச் சுற்றி இருக்கும் எல்லா மக்களுக்கு மிகுந்த பய னாக இருக்கும். உயர் தரமான சிகிச்சையை மக்கள் பெற்று பயன் அடைவார்கள். எனது கோரிக்கையை ஏற்று கடலுாரில் ஒன்றிய அரசு மருத்துவமனை ஒன்றை அமைத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நீட் தேர்வை நாங்கள் ஏன் கடு மையாக எதிர்க்கிறோம்? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஏன் எதிர்க்கிறார்கள். மாநிலங்களில் இருக்கும் பள்ளிகளை ஒன்றிய அரசு கட்ட வில்லை. மாநில அரசுதான் கட்டுகிறது. ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு ஊதி யம் தந்து, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உரு வாக்கப்படுகிறார்கள்.
ஆனால், இங்கு மாணவர்க ளுக்கு இடையேயான நீட் போட்டி தேர்வு சமமானதாக இல்லை. அதனால், எங்கள் மாணவர்கள் வரமுடியவில்லை. இது ஜனநாயக விரோதப் போக்கு.
ஒன்றிய அரசு அதிகாராத்தை எடுத்துக்கொள்ளாமல், மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும். மருத்துவப் படிப்பில் சேர மாணவர்களை நாங்களே தயார் செய்ய வேண்டும். நீட் தேர்வு இல்லாமல், மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும்.
இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதம் உள்ள தமிழ்நாட்டில் 11 சதவீதம் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
வயது முதிர்ந்தவர்களுக்கு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் எந்தத் திட்டமும் இல்லை. நான் ஒரு டாக்டர். மனநலம், ஆட்டிசம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது. சிறப்பு திட்டம் ஏதாவது உள்ளதா? ஆட்டிசம் நோய்க்கு சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய்களு்ககும் இன்சூரன்ஸ் கவர் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து செங்கோலை கொண்டு வந்து இங்கு வைத்திருப்பது எங்களுக்குப் பெரும், மகிழ்ச்சி. அது தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல் மட்டும் வைத்திருக்கிறீர்களே? இது நியாயமா? எங்களுக்கு செங்கல்; உங்களுக்கு மட்டும் செங்கோலா? என்று கேட்கிறேன்.
-இவ்வாறு மக்களவை உறுப்பினர் டாக்டர்
எம்.கே.விஷ்ணுபிரசாத் பேசினார்.