புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா- 2024 என்ற தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார்.
இது, 2019-ஆம் ஆண்டின் திருநங்கைகள் உரிமைகள் பாது காப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா ஆகும். திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்க இம்மசோதா வகை செய்கிறது. சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் பாரபட்சத்துக்கு தீர்வு காண இடஒதுக்கீடு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மசோதாவின் 8ஏ பிரிவில், அனைத்து அரசு நிறுவனங்களி லும் பொது, எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.
நேரடி ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் பதவிகளுக்கு இது பொருந்தும். ஒருவேளை, போதிய திருநங்கை பணியாளர்கள் கிடைக்காவிட்டால், அந்தந்த பிரிவை சேர்ந்த ஆண் அல்லது பெண்ணுக்கு அந்த காலியிடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாவின் 13ஏ பிரிவில், அரசு நிதியில் நடத்தப்படும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவ னங்களிலும் ஒவ்வொரு வகுப்பிலும், பாடப்பிரிவிலும் திருநங்கை மாணவர்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம்வரையும், தொழிற்கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.