லக்னோ, ஜூலை 28 செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் பரி சளித்தார் ராகுல் காந்தி அவர்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கருநாடக சட்டமன்றத் தோ்தல் பிரச்சாரத்தின்போது அமித்ஷா, கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.
இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26 ஆம் தேதி சுல்தானப்பூருக்கு மக்க ளவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.
அப்போது சுல்தான்பூ ரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்துப் பேசினார். அவரின் வேலைகள், அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
இந்நிலையில், நேற்று (27.7.2024) செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்
இதனால், இனி கைகளால் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரி வித்துள்ள ராம்சேட், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.