ஆர்.என். ரவியை மீண்டும் ஆளுநராக நியமித் தால் வழக்கு தொடருவோம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மூத்த வழக்குரைஞர் மனு.
பெரிய ஏமாற்றம்தான்!
எந்தப் பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு மாநிலத்தில் புதி தாக தொடங்கும் சில திட்டங்களை மட்டும் அறி விப்பார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு புதிதாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை, இது ஒரு பெரிய ஏமாற்றம்தான். நிதி வல்லுநர்கள் கருத்து.
பரிதாபம்!
2024-2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று சொல்லி வந்த தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணா மலை, ஏமாற்றம் அடைந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ரூபாய் ஒரு லட்சம் கோடி திட்டங்கள் என்று பல்டி அடிப்பது பரிதாபம்!