ஒன்றிய நிதிநிலை அறிக்கை தலைவர்கள் கருத்து

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை 24- ஒன்றிய நிதிநிலை அறிக்கை தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
மேற்கு வங்காள
முதலமைச்சர் மம்தா
ஒன்றிய நிதிநிலை அறிக்கை அரசியல் சார்பானது அது பாஜன தாவின் கூட்டணிக் கட்சிகளை மகிழ்விக்க முயற்சி. ஒன்றிய அரசு தொடர்ந்து மேற்கு வங்காளத்தை எப்போதும் புறக்கணிக்கிறது. ஆந்திரா மற்றும் பீகாருக்கு நிதி உதவி வழங்கியது எனக்கு பிரச்சினை யில்லை. ஆனால் பாகுபாடு காட்ட கூடாது என்று தான் சொல்கிறேன். ஒன்றிய அரசில் இருந்து நாங்கள் பெற வேண்டிய ரூ.17,000 கோடி உள்ளது. அவர்கள் எங்களுக்கு ஒரு பைசாவும் கொடுக்கவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்கு விரோதமானது. அடுத்த தலை முறைக்கு வேலை வாய்ப்புகள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை இந்த நிதிநிலை அறிக்கையில் ஒளி இல்லை வெறும் இருள் மட்டுமே.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி:
ஒன்றிய நிதிநிலை அறிக்கை முன்பை போலவே முக்கிய பணக்காரர்களுக்காக அறிவிக்கப் பட்டுள்ளது. ஏழைகள் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள், விவசா யிகள், பெண்கள், உழைப்பாளர்கள் ஆகியோருக்கு எதுவும் இல்லை. இது விரக்தி அடைய செய்து இருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சி:
பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்று அரசு ஊழியர்கள் கேட்டு கொண்டனர். ஆனால் அது ஏற்கப்படவில்லை. பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அன்றாடப் பொருட்களுக்கான வரி குறைக்கப்படவில்லை. மாறாக நீண்டகாலத்திற்கு பணம் முதலீடு செய்யும் நபர்களுக்கு வரியை 10லிருந்து 12.3 சதவீதமாகவும் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யும் நபர்களுக்கு 5லிருந்து 20 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் தங்களுக்கு பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை இரட்டிப்பு ஆகும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் இது தொடர்பாக அறிவிப்பு இல்லை.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்:
இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தின் தொகுப்பாகவே உள்ளது இருப்பினும் மனிதர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதே நன்றி கூறத்தக்கது. நிதிநிலை அறிக்கைpயல், வேலைவாய்ப்பு, பணவீக்கம், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பீகார் மற்றும் ஆந்திராவுக்கான வளர்ச்சி நடவடிக்கைகள் பாரதிய ஜனதாவின் ஆட்சியை காப்பாற்றும் அரசியல் நடவடிக்கை. உத்தரபிரதேசம் நாட்டிற்கு பிரதமர்களை வழங்கி யுள்ளது. இருந்தாலும் இந்த மாநில மக்களுக்கு எதுவும் வழங்கப் படவில்லை.

ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி:
ஒன்றிய நிதிநிலை அறிக்கை பீகார் மக்களை விரக்தியடைய செய்துள்ளது. பீகாரை முன்னேற்ற பாதையில் கொண்டுவர ஒரு மீட்பு திட்டம் தான் தேவை. அதற்கு சிறப்பு மாநில அந்தஸ்து தான் தீர்வு ஆனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை பீகார் மக்களுக்கு புதிய பரிசு என்று கூறி அவமதிக்கிறார்கள். இளைஞர்களின் நல்ல எதிர்காலத்திற்காகவும், தொழிற்துறைகளின் மேம்பாட்டிற் காகவும் சிறப்பு மாநில அந்தஸ்து தான் தீர்வு என்ற எங்களது கோரிக் கையில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *