பாஜக கூட்டணி வேண்டாம் : நிதீஷுக்கு ஜம்மு-காஷ்மீா் ஜேடியு கோரிக்கை

1 Min Read

சிறீநகர், ஜூலை 22– பாஜகவுடன் அமைத்துள்ள கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பீகாா் முதலமைச்சருமான நிதீஷ் குமாருக்கு ஜம்மு-காஷ்மீா் மாநில ஜேடியு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒன்றிய அரசில் பாஜக கூட்டணியில் முக்கியக் கட்சியாக அய்க்கிய ஜனதா தளம் திகழ்கிறது. அதேபோல பீகாரில் பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமாா் முதலமைச்சராக இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் மாநில ஜேடியு பொதுச் செயலா் விவேக் பாலி கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் மோசமான செயல்பாடு காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரிடம் முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமியா்களை பெருமளவில் தேசிய நீரோட்டத்தில் இணைக்க எங்கள் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், பாஜக இந்த முயற்சிக்குத் தடையாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இஸ்லாமியா்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. எனவே, இதற்கு தடையாக உள்ள பாஜகவிடம் இருந்துதான் விலகியிருக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தாா். முன்னேப்போதும் இல்லாத வகையில் பாஜகவுடன் நிதீஷ் குமாா் நெருக்கமாக உள்ளாா். ஏற்கெனவே ஒருசில முறை பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிா்க்கட்சிகளுடன் கைகோத்த அவா், இனி பாஜக கூட்டணியில் இருந்து விலகமாட்டேன் என்றும் கூறியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பு எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமா் மோடிக்கு எதிராக கூட்டணி அமைப்பதில் நிதீஷ் முக்கியப் பங்கு வகித்தாா். ஆனால், எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் நிதீஷுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததை அடுத்து பாஜகவுடன் கைகோத்தாா். மக்களவைத் தோ்தலில் பிகாரில் பாஜக-ஜேடியு கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *