ராஜஸ்தான் பிஜேபி அரசின் யோக்கியதை தேர்வு அறையில் மாணவர்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள்

viduthalai
2 Min Read

ஜெய்ப்பூர், ஜூலை 20- ராஜஸ்தான் மாநில திறந்தநிலை பள்ளி வாரியம் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வின்போது தேர்வு அறையில் முறை கேடுகள் நடப்பதை தடுக்க ராஜஸ்தான் கல் வித்துறையின் தேர்வு கண்காணிப்புக் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொலு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விடைகளை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கையும் களவுமாகப் பிடி பட்டனர்.

இது தொடர்பாகத் தேர்வு கண்காணிப்புக் குழு தலைவர் நிஷி ஜெயின் கூறுகையில்: குறிப்பிட்ட பள்ளியில் தேர்வின்போது மோசடி நடந்து வருவதாக எங்க ளுக்குத் துப்பு கிடைத்தது. சோதனை நடத்த நாங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்தபோது, நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். மதில் சுவர் ஏறிக் குதித்து பள்ளிக்கூட வளாகத்துக்குள் நுழைந் தோம். அப்போது தேர்வறைகளில் உள்ள கரும்பலகைகளில் கேள் வித்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடை களை ஆசிரியர்கள் எழுதிக் கொண்டி ருந்தனர். மாண வர்கள் காப்பி அடிக்க உதவும்விதமாக இத்த கைய ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி அந்த பள்ளியின் பல தேர்வறைகளில் நடந்து கொண்டிருந்தது. அத்தனையும் கேமராவில் காணொலியாகப் பதிவு செய்தோம்.

மேலும் அங்குத் தேர்வெழுதிய மாணவர் களிடம் விசாரணை நடத்தியபோது இத்தகைய குறுக்குவழிக்கு உதவ ஆசிரியர்களுக்கு ரூ.2000 வரை லஞ்சம் கொடுக்கப்படுவதையும் கண்டுபிடித்தோம். இதுபோதா தென்று, அடையாளம் காணப் பட்ட அனசுயா மற்றும் கோமல் வர்மா ஆகிய இரண்டு ஆசிரியர்கள் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்களுக்குப் பதில் தேர்வெழுதிக் கொண்டிருந்த நிலை யில் பிடிபட்டனர். நடந்த நிகழ்வு கல்வி அதிகாரிகள் மூலம் காவல்துறைக்குத் தெரி விக்கப்பட்டது. காவல் துறையினர் வருவதற்குள் ஆள்மாறாட்டம் செய்த இருவரும் தப்பி ஓடினர். குற்றத்தில் தொடர்புடைய பள்ளி தலைமைஆசிரியர் ராஜேந்திர சிங் சவுகான் உட்பட 10 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பலோதி வட்டார கல்வி அலுவலர்கிஷோர் போக்ரா கூறுகையில், “தேர்வு மோசடிக்கு எதி ராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3-ஆம் வகுப்பு பாட ஆசிரியர்கள் ஆறு பேர் மற்றும்ஒரு நூலகர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *