சென்னை மாநகரக் காவல்துறை – வேகம் எடுக்கிறது!

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 18- சென்னையில் காவல் ஆணையர் அருண் மூலம் ஆபரேஷன் டேர்.. அதாவது DARE – துணிச்சல் என்று பெயரில் புதிய காவல் செயல் பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னைக் காவல் ஆணை யர் அருண் உத்தரவின் பேரில் இதற்காக தனிக் குழு அமைக்கப் பட்டு உள்ளது.
அதன்படி 12 துணை ஆணையர் களின் நேரடி மேற்பார்வையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிரடி செயல்பாடுகள்: சென்னையின் புதிய ஆணையர் அருண் நேரடியாக ரவுடிகளின் வீடுகள், இருப்பிடங்களுக்கே சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

குற்றப் பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் பட்டியலை அருண் எடுத்துள்ளார். அவர் சென்னை பெருநகரம் முழுவதும் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கே செல்ல முடிவு எடுத்துள்ளனர். அங்கே நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ரவுடியிசத்தை விட விரும்பாத ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ‘ரெய்டு’ நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *