திராவிடர்கழகம் சார்பாக கழகக் கொடியேற்று விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கழகக் கொடியேற்று விழா நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில்  கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலையில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழக இலட்சியக் கொடியினை ஏற்றிவைத்தார். 

கழக மூத்த முன்னோடிகள் கழகக் காப்பாளர்  ஞா.பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர்  ம.தயாளன் மாவட்ட துணைத் தலைவர் ,ச.நல்லபெருமாள் மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ. சிவதாணு, மாநகர செயலாளர் மு.இராஜசேகர் துணைத்தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது பகுத்தறிவாளர்கழக செயலாளர் பெரியார் தாஸ், தோழர்கள் செல்லையன்,மு. குமரிச்செல்வன், கு சந்திரன் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *