‘விஜய பாரதம்’ பதில் சொல்லுமா?

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம் (19.5.2023) தலையங்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.

“கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், அமைச்சர்கள் உள்ளிட்ட எட்டுப் பேருடன் முதலீடுகளை வரவேற்க நடக்கும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள அய்க்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபிக்கு மே 7 முதல் 11 வரை விஜயம் செய்ய முயற்சித்தார்.  அந்த நாட்டில் இருந்து யாரோ அழைத்தார்களாம். மத்திய அரசின் அயலுறவுத் துறை அதைத் தடுத்து விட்டது. ‘முதலீட்டுக்கான கூட்டம் என்றால் அதிகாரிகள்தான் போக வேண்டும்’ என்று மத்திய  அரசு சொல்லி விட்டது. வெளி நாட்டிலிருந்து  ஒரு மாநிலத்திற்கு நேரடி யாக அழைப்பு விடுப்பது முறையல்ல என்று  மத்திய அரசு தெரிவித்தது. முதலமைச்சர்  தன் பயணத்தை இப் போதைக்கு ரத்து செய்து விட்டார்.”

இதுதான் விஜயபாரதத்தின் தலையங்கப் பகுதி கருத்து

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அதிகாரிகள்தான் போக வேண்டும். முதல் அமைச்சர் போகக் கூடாதாம்.

அப்படியா…! ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றாரே – அது எப்படியாம்? அது மட்டுமா? அதானிக்காக கடன் வழங்கிட ஸ்டேட் பாங்கு அதிகாரியையும் அதானியையும் உடன் அழைத்துச் சென்றாரே – ‘விஜயபாரதம்’ அகராதியில் இதற்குப்  பொருள் என்னவாம்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *