கன மழையால் 24.50 லட்சம் பேருக்கு பாதிப்பு தத்தளிக்கும் அசாம் மாநிலம் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கவுகாத்தி, ஜூலை 7- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆளும் அசாமில் கடந்த 5 வார காலமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வரும் நிலையில், மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.

குறிப்பாக கடந்த 48 மணி நேரமாக அசாம் மாநிலத்தில் அதீத அளவில் கன மழை பொழிந்து வருவதால் மாநி லத்தின் வெள்ளப் பாதிப்பு நிலைமை மிகவும் மோச மடைந்துள்ளது.

20 மாவட்டங்களின்  நிலைமை மோசம்

30 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் கைலாகண்டி, கசார், காம்ரூப், ஹோஜை, துப்ரி, நாகோன், மோரிகன், பார்பேட்டா, திப்ருகர், நல் பாரி, திமாஜி, போங்கைகான், லக்கிம்பூர், ஜோர்கட், சோனிட்புர், கோக்ராஜ்கர், கரிம்கஞ்ச், தெற்கு சல்மாரா, தர்ராங் மற்றும் தின்சுகியா ஆகிய 20 மாவட் டங்கள் தற்காலிக தீவுகளாக மாறியுள்ளன.

படகு போக்குவரத்து மூலம் மக்களை தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் மீட்டு வருகின்றனர். கனமழை வெள்ளத் தால் 24.50 லட்சம் பேர் முற்றிலும் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ள னர். வெள்ளத்தால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 64 ஆக (2024 முழு வதும்) உயர்ந்துள்ளது.

வெள்ளத்தால் அசாம் மாநிலமே மிதக்கும் நிலையிலும், மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மந்தமாகச் செயல்பட்டு வருகிறது. 30 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் திப்ருகர் உள் ளிட்ட ஒன்றி ரண்டு மாவட்டங்களை மட்டும் மேற்பார்வையிட்டது போல ஷூட்டிங் எடுத்து காட்சிப் பதிவு வெளியிட்டு மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா அசாம் மக்களை ஏமாற்றி வருகிறார்.

குறிப்பாக ஒன்றிய மோடி அரசு அசாம் வெள்ளத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *