நில மோசடி புகார் தலைமறைவான மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனிப்படை தேடுதல் வேட்டை

1 Min Read

கரூர், ஜூன் 28- கரூர், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு)முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி அதிமு.க. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12ஆம் தேதி முன்பிணை கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்தவழக்கை விசாரணை செய்த நீதிபதி, அவரின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே நிலமோசடி வழக்கு சி.பி.சி.அய்.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *