பிணை மனுக்கள் தேவையில்லாமல் ஒத்தி வைக்கப்படக் கூடாது – உச்சநீதிமன்றம்

1 Min Read

புதுடில்லி, ஜூன் 27- பிணை மனுக்கள் மீதான விசாரணை தேவையில்லாமல் ஒத்திவைக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், மேனாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சார்பில் தாக்கல் செய்த பிணை மனு மீது அடுத்த விசாரணையின்போது முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆத் ஆத்மியைச் சேர்ந்த மேனாள் டில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் பிணை மனு மீது ஜூலை 9ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, சத்யேந்தர் ஜெயினின் பிணை மனுவை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யும்போது உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை வலியுறுத்தியிருந்தது.
பிணை கோரி தாக்கல் செய்யப் படும் மனுக்கள் அவசியமின்றி ஒத்தி வைக்கப்படக் கூடாது, அடுத்த விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் இது குறித்து உரிய முடிவெடுக்கும் என்று நம்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சத்யேந்தர் ஜெயின் பிணை மனு வரும் ஜூலை 9ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *