ஒன்றிய அரசின் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் குறித்து கார்கே விமர்சனம்

1 Min Read

புதுடில்லி, ஜூன் 25- ஒன்றிய அரசு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டத்தை காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக விமர் சித்துள்ளார்.

சமீபத்தில் நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வு களில் முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில், இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு ‘பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுத்தல்) சட்டம், 2024’ என்ற சட்டம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி முறை கேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை மற்றும் ரு. 1 கோடி அபராதம் விதிக்கப் பட உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில்,‘கடந்த 7 ஆண்டுகளில் 70 வினாத்தாள்கள் கசிந்து உள்ளன.

ஆனால், பாஜக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? நீட் தேர்வு முறைகேட்டில் பா.ஜனதா எவ்வளவு முயற்சி செய்தாலும், ஊழல் மற்றும் கல்வி மாபியாவை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது’ என குறிப்பிட்டு இருந்தார்.

வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியே குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றிருந்தும், 22.6.2024 அன்று இரவுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டம் அமல்படுத்தப் பட்டது என கல்வி அமைச் சர் ஏன் பொய் கூறினார்? இந்த சட்டத்துக்கான விதிமுறைகளை இன்னும் சட்ட அமைச்சகம் வகுக்கவில்லை” என்று பதிந்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *