ஒன்றிய அரசின் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் குறித்து கார்கே விமர்சனம்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 25- ஒன்றிய அரசு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டத்தை காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக விமர் சித்துள்ளார்.

சமீபத்தில் நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வு களில் முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில், இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு ‘பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுத்தல்) சட்டம், 2024’ என்ற சட்டம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி முறை கேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை மற்றும் ரு. 1 கோடி அபராதம் விதிக்கப் பட உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில்,‘கடந்த 7 ஆண்டுகளில் 70 வினாத்தாள்கள் கசிந்து உள்ளன.

ஆனால், பாஜக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? நீட் தேர்வு முறைகேட்டில் பா.ஜனதா எவ்வளவு முயற்சி செய்தாலும், ஊழல் மற்றும் கல்வி மாபியாவை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது’ என குறிப்பிட்டு இருந்தார்.

வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியே குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றிருந்தும், 22.6.2024 அன்று இரவுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டம் அமல்படுத்தப் பட்டது என கல்வி அமைச் சர் ஏன் பொய் கூறினார்? இந்த சட்டத்துக்கான விதிமுறைகளை இன்னும் சட்ட அமைச்சகம் வகுக்கவில்லை” என்று பதிந்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *