இனி பா.ஜ.க.வுக்கு ஆதரவு இல்லை வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் பி.ஜே.டி.யின் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!

viduthalai
1 Min Read

புவனேஸ்வரம், ஜூன்25- நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட ஒடிசா மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலை மையிலான பிஜு ஜனதா தளம் கட்சி முடிவு எடுத்து உள்ளது.

ஒடிசாவில் நடந்து முடிந்த 2024 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து 24 ஆண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்தார். மக்களவையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்முறை பெற்று ஆட்சியை பிடித்தது. மக்களவையிலும் பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தன்னுடைய நிலைப்பாட்டில் அதிரடி மாற்றத்தை நவீன் பட்நாயக் கொண்டு வந்துள்ளார்.

பி.ஜே.டி.யின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோ சனை நடத்திய அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக், இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பிஜு ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங் களவையில் வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்றும் ஒடிசா மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை உரிய முறையில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நவீன் பட்நாயக் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார்.
ஒடிசாவுக்கு சிறப்புத் தகுதி வழங்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் முடிவு எடுத்துள்ளனர். 9 மாநிலங்களவை உறுப் பினர்களைக் கொண்ட பிஜு ஜனதா தளம் கட்சியின் முடிவால் ஒன்றிய பாஜக அரசுக்கு புதிய நெருக்கடி அதி கரித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாவிட் டாலும் அனைத்து விவ காரங்களிலும் பாஜகவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு அளித்து வந்தது. ஆனால் இனிமேல் பிரச்சினை அடிப்படையில் கூட பாஜ கவுக்கு ஆதரவு இல்லை என்று பிஜு ஜனதா தளம் திட்டவட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *