Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் திருமாவளவன் எம்.பி., கண்டன உரை
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
அரசியல்இந்தியாகழகம்தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் திருமாவளவன் எம்.பி., கண்டன உரை

Last updated: June 22, 2024 5:29 pm
Published: June 22, 2024
தமிழ்நாடு
SHARE
* நீட் தேர்வு வேண்டாம் என்பது வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று 
இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகப் பேசவேண்டுமெனப் பேசுகின்ற கருத்துகள் அல்ல!
* ஒட்டுமொத்தமாக கல்வி தொடர்பான அதிகாரத்தை, இந்திய ஒன்றிய அரசே
எடுத்துக் கொள்கின்றது!
மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் படிக்கின்ற மாணவர்கள் அனைவரும் ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்படுகின்றனர்!
சென்னை, ஜூன் 22 நீட் தேர்வு வேண்டாம் என்பது வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகப் பேசவேண்டுமெனப் பேசுகின்ற கருத்துகள் அல்ல. எவராலும் மறுதலிக்க முடியாத, ஆதாரங்களுடன் கூடிய வாதங்கள். ஒட்டுமொத்தமாக கல்வி தொடர்பான அதிகாரத்தை, இந்திய ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கின்றது! தமிழ்நாட்டில் மட்டும் என்று நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்தத்தில் எல்லா மாநிலங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் படிக்கின்ற மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.
‘‘இனியும் தேவையா நீட்?”
கடந்த 18.6.2024 அன்று மாலை சென்னை வள்ளு வர்கோட்டம் அருகில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ‘‘இனியும் தேவையா நீட்?” என்ற தலைப்பில்
நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்
சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
அண்ணன் இரா.முத்தரசன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை விளக்க அணியின் மாநில செயலாளர் மானமிகு வந்தியத்தேவன் அவர்களே,
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செய லாளர் தோழர் பு.பா.பிரின்சு கஜேந்திர பாபு அவர்களே,
உரையாற்றி விடைபெற்றுச் சென்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் உரையாற்றிச் சென்றிருக்கின்ற அபுபக்கர் அவர்களே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றி விடைபெற்று இருக்கின்ற தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்களே,
எனக்கு அடுத்து உங்களிடையே உரையாற்றவிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணன் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
நிறைவாக நம்மிடையே பேருரை ஆற்றவிருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவரும், தமிழர் தலைவருமான மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களே,
நன்றியுரையாற்றவிருக்கின்ற இளமாறன் அவர்களே,
திரளாகக் கூடியிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீட் தேர்வு குறித்து எனக்கு முன் உரையாற்றிய தலைவர்கள் விரிவாக இங்கே பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்திருக்கிறார்கள்.
நீட் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் இருக்கின்ற சிக்கல்கள் அல்லது கோளறுபடிகள் ஒருபுறம்.
நீட் தேர்வால் சமூகநீதி பாதிக்கப்படுகிறது!
அந்தக் குளறுபடிகளுக்காக நீட் தேர்வு வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. குளறுபடிகள் இருக்கின்றன என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகச் சொல்கின்றோம், அவ்வளவுதான்.
ஆனால், நீட் தேர்வு வேண்டாம் என்று நாம் வலியுறுத்து வதற்கு முதன்மையான காரணம். இதனால் சமூகநீதி பாதிக்கப்படுகின்றது என்பதுதான்.
சமூகநீதி என்னும் கோட்பாட்டுக்கு எதிரானது. அதைக் குழிதோண்டி புதைப்பதற்கு இது ஏதுவாக அமைகிறது. விளிம்பு நிலை மக்களின் கல்வி உரிமை, மருத்துவத் துறையில் பாதிக்கப்படுகிறது. மாநில அரசுக்கான அதிகாரம் பறிக்கப்படுகிறது.
ஆகவே, மய்யத்தில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, விளிம்பு நிலை மக்களின்மீது இப்படிப்பட்ட முதல் தேர்வு என்னும் பெயரால், இப்படிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கக்கூடாது. எனவே, நீட் வேண்டாம்.
பயிற்சி தருகின்ற தனியார் நிறுவனங்கள்
கோடி கோடியாகக் கொள்ளையடிக்கின்றன!
720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எப்படி எடுத்தார்கள்? 719 மதிப்பெண்கள் எப்படி வந்தன? 718 மதிப்பெண்கள் எப்படி வந்தன?
நீட் தேர்வு கோடிக்கணக்கான ரூபாய் தொடர்பான ஊழல் முறைகேடுகளில் சிக்கி உள்ளது. இதற்கென்று பயிற்சி தருகின்ற தனியார் நிறுவனங்கள் கோடி கோடி யாகக் கொள்ளையடிக்கின்றன. இவையெல்லாம் இதை நடை முறைப்படுத்துவதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் என்பதால் சுட்டிக்காட்டுகின்றோம், அவ்வளவுதான்.
ஒட்டுமொத்தமாக கல்வி தொடர்பான அதிகாரத்தை, இந்திய ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கின்றது!
ஆனால், அடிப்படையில், இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் மாநில அரசுகளை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கின்ற வகையிலே, ஒட்டுமொத்தமாக கல்வி தொடர்பான அதிகாரத்தை, இந்திய ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கின்றது என்கின்ற ஆதிக்கப் போக்கைக் கண்டிக்கின்றோம். இதுதான் மிகவும் முக்கியமானது.
இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் கல்வி தொடர்பான அதிகாரம், ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கின்ற காரணத்தி னால், தான்தோன்றித்தனமாக செயல்படுகின்றனர்; மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்பது மிகவும் முக்கியமானது.
இரண்டாவது, மாநில அரசுகளின் கல்வித் திட்டத்தைச் சிதைப்பது.
மாநில அரசுக்கான அதிகாரத்தை அல்லது உரிமையைப் பறிப்பது என்பது ஒருபுறம்.
இரண்டாவது, மாநில அரசுகள் பின்பற்றி வருகின்ற, மாநில அரசுக்கான அந்தந்த மாநிலங்களுக்கான கல்வித் திட்டம் தொடர்பான உரிமைகளைச் சிதைப்பது.
அடுத்து விளிம்பு நிலை மக்கள், ஏழை, எளிய மக்கள், அரசு பள்ளிகளில் பயிலும் குடும்பத்தைச் சார்ந்த மாணவச் செல்வங்கள், முதல் தலைமுறையாகப் படிக்கும் குடும்பத்தைச் சார்ந்த மாணவக் கண்மணிகள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய வகையிலே, அவர்களையெல்லாம் மறைமுகமாக வெளி யேற்றுகிற ஒரு சதி முயற்சி.
எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களை, வெளியேற்றுகிற ஒரு சதி முயற்சி!
எல்லோருக்கும் பொதுவானது நுழைவுத் தேர்வு; யார் வேண்டுமானாலும் அத்தேர்வை எழுதலாம்; யார் வேண்டுமானாலும் அத்தேர்வில் தேர்ச்சி பெறலாம். அதன்மூலம் யார் வேண்டுமானாலும், மருத்துவக் கல்வியைப் பெறலாம் என்று பொதுவான ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு, எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களை, வெளியேற்றுகிற ஒரு சதி முயற்சி இதில் இருக்கிறது.
ஆகவே அந்த சதி முயற்சி சமூக நீதிக்கு எதிரானது என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு.
ஆசிரியர் அய்யாவின் தெளிவான அறிக்கை!
ஆசிரியர் அய்யா அவர்கள் விரிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் மிக முக்கிய மானது – நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் யார், யார்?
அய்ந்தாறு தலைப்புகளில் விரிவான அறிக்கையை அவர் பதிவு செய்திருக்கிறார், வெளியிட்டு இருக்கிறார். அதில் 4 ஆவதாக உள்ள பத்தியில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் யார், யார்? என்பது விரிவாக உள்ளது.
2016 ஆம் ஆண்டில், நீட் இல்லாதபொழுது, நீட் என்கிற நுழைவுத் தேர்வு நடைமுறையில் இல்லாதபோது, அரசு மேனிலைப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் பெற்ற இடங்கள் 30.
அரசு மேனிலைப்பள்ளிகளிலிருந்து பயின்று, மாநில அரசின் பாடத்திட்டங்களின் வழியாகப் பயின்று, மருத்துவக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றவர்கள் 30 பேர்.
நீட் நுழைவுத் தேர்வு வந்த பிறகு வெறும் 5 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றனர்.
அரசு மேனிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நீட் தேர்வு இல்லாதபொழுது, மாநில அரசின் பாடத் திட்டத்தின்கீழ் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் மொத்தம் 3,546.
நீட் தேர்வு வந்த பிறகு, 2,314.
இதனால் ஏற்பட்டிருக்கின்ற இழப்பு 1,232 இடங்கள்.
நீட் வந்த பிறகு, 1232 மாணவர்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புப் பறிபோயிருக்கின்றது என்கின்ற புள்ளி விவரத்தை தன்னுடைய அறிக்கையிலே ஆசிரியர் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.
நீட் இல்லாதபோது 2016 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் வெறும் 12.
நீட் தேர்வு வந்த பிறகு, அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220.
12 எங்கே? 1220 எங்கே?
20 மடங்கு அதிகம்.
பொதுவாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது தனியார் நிறுவனத்தின்கீழ் இயங்குகின்ற பள்ளிகள், நடுத்தர வர்க்கத்திற்கு மேலே உள்ளவர்களின் பிள்ளைகள் படிக்கின்ற இடங்கள். ஆண்டுக்கில் லட்சக்கணக்கான ரூபாய்களை கல்விக் கட்டணம் செலுத்தக்கூடிய வலிமையுள்ள குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளினால்தான் அந்தப் பள்ளிகளில் படிக்க முடியும்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளால், அந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாது.
20 மடங்கு அதிகரித்திருக்கிறது
ஆகவே, நீட் இல்லாதபொழுது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள் 12 பேர்தான் மருத்துவக் கல்லூரி இடங்களுக்குச் தேர்வு பெறுகிறார்கள். நீட் வந்த பிறகு, 1220 பேர் மருத்துவக் கல்லூரி இடங்களுக்குத் தேர்வாகிறார்கள். மொத்தம் 20 மடங்கு அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு கொடுத்திருக்கின்ற புள்ளி விவரம் –
2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கான மொத்த இடங்கள் 6,999. கிட்டத்தட்ட 7 ஆயிரம் இடங்கள்.
அந்த 7 ஆயிரம் இடங்களில், அரசு மருத்துவக் கல்லூரி களில் உள்ள இடங்கள் 4,349.
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்குக் கிடைத்திருக்கின்ற அனுமதி 2,650 இடங்கள்.
சி.பி.எஸ்.இ. மாணவர்கள் எப்படி தர வரிசையில் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
முதல் 10 ரேங்கில் – சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 8 பேர்.
இரண்டே இரண்டு பேர்தான் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள்.
முதல் 100 பேரில், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள் 83 பேர்; மாநில அரசுப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் 17 பேர்.
முதல் ஆயிரம் பேரில், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள் 601 பேர். மாநில அரசுப் பாடத் திட்டத்தின்கீழ் படித்த மாணவர்கள் 394 பேர்.
அரசுப் பள்ளிகளில் படிப்பவர் யார்?
மிகமிக வசதி குன்றிய, பொருளாதரத்தில் நலிவ டைந்த, ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பிள்ளை கள்தான் இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் பயின்று கொண்டிருக்கின்றார்கள்; மாநிலப் பாடத் திட்டங்களில் படித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
நீட் தேர்வுக்குமுன் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள் ஒரே ஒரு சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது. இப்பொழுது ஆயிரம் பேரில், அது 60 சதவிகிதமாக ஆகிவிட்டது.
நீதிபதி திரு.ஏ.கே.ராஜன் தலைமையிலான
குழுவின் அறிக்கை!
நீட் தேர்வுக்குமுன் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த 98.2 சதவிகித மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது. தற்போது அது 59 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
இவையெல்லாம் நீதிபதி திரு.ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு கொடுத்திருக்கின்ற புள்ளிவிவரங்கள்.
நீட் தேர்வுக்குமுன் கிட்டத்தட்ட 14.8 சதவிகிதம் தமிழ்வழி மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.சில் சேர முடிந்தது. ஆனால், தற்போது அது 2 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கும், வசதி படைத்த குடும்பத்தவர்களுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளால், 20.38 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் யாருக்காகக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது?
இந்த நுழைவுத் தேர்வு எதற்காகக் கொண்டு வரப்பட்டது?
எப்படி சமூகநீதியை நீர்த்துப் போகச் செய்கிறார்கள்?
சமூகநீதியின்மூலம் எளிய குடும்பத்தினர் பெற்ற பயன் எவ்வாறு தடுக்கப்படுகின்றன? தட்டிப் பறிக்கப்படுகின்றன?
இதுதான் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கின்ற உண்மைகள். இவை அனைத்தும் புள்ளிவிவரங்களோடு தொடர்புடையன.
ஒன்றிய அரசுக்கு எதிராகப்
பேசவேண்டும் என்பதற்காகப் பேசவில்லை!
வாய்ப்புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகப் பேசவேண்டும் என்று பேசுகின்ற கருத்துகள் அல்ல.
எவராலும் மறுதலிக்க முடியாத, ஆதாரங்களுடன் கூடிய வாதங்கள் இவை.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு கூடாது!
விடுதலைச் சிறுத்தைகள் தொடக்கக் காலத்திலிருந்து வலியுறுத்துகிற கருத்து, இந்தியா முழுவதும் நீட் தேர்வு கூடாது என்பதுதான்.
தமிழ்நாட்டில் மட்டும் என்று நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்தத்தில் எல்லா மாநிலங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் படிக்கின்ற மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்திய ஒன்றிய அரசின் மேலாதிக்கப் போக்கு இதில் வெளிப்படுகிறது. மாநில அரசுகளுக்கு எதிரான ஆதிக்கப் போக்கு வெளிப்படுகிறது.
எனவே, ஒட்டுமொத்தமாக அகில இந்திய அளவில், ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து நீட் தேர்விற்கு எதிராகப் போராடவேண்டிய தேவை இருக்கிறது.
இந்த எல்லா மாற்றங்களையும் உன்னிப்பாகக் கவனித்தால், நுட்பமாக கவனித்தால், இந்திய அரசியலில் ஏற்பட்டு இருக்கிற மிகப்பெரிய மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு காரணம் இருக்கிறது. (தொடரும்)
Ad imageAd image
குரங்கா, கடவுளா – யாருக்கு சக்தி? உத்தரப் பிரதேச பிகாரி கோயிலில் ரூ.25 லட்சம் வைர நகையை தூக்கிச் சென்ற குரங்கு
கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கொடியேற்றுவிழா
தோஷங்களை நீக்குவதாகக் கூறும் ஆம்பூர் நாகநாதசுவாமி கோவிலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய பணிகள் தீவிரம் ஜூலைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்
TAGGED:எம்.பி.
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?