புனே, ஜூன்22- மகாராட்டிர மாநிலம் புனே நகரில் ஹடாஸ்பர், ராம்டெக்டி, வனோவீர், பைரோபா நலா, ரஸ்தா பீட், பிப்வெவாடி, பாரதிவித்யா பீடம், பத்மாவதி உள்ளிட்டபகுதிகளில் காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் கடந்த 19.6.2024 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும்ஏராளமான 4 சக்கர வாகனங்கள்
மற்றும் இரு சக்கர வாகனங்கள்நிறுத்தி வைக்கப் பட்டிருந்ததை பார்த்தார்.
இதையடுத்து, சாலையோரம், நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விதிகளை பின்பற்றாவிட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வாகனங்களை 6 மாதங்களுக்கு பறிமுதல் செய்து வைக்கும்படி உத்தரவிட்டார்.