பூனைக்குட்டி வெளியே வந்தது!

2 Min Read

பாட்னா, ஜூன் 17 நீட் தேர்வுக்கு 24 மணி நேரம் முன்பாக கேள்வித்தாளை விற்பனை செய்த கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளது.
ஒரு நீட் கேள்வித்தாளை 32 லட்ச ரூபாய்க்கு விற்றதை இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பீகார் மாநில பொருளாதார குற்றப்பரிவு (EOU) நடத்திய அதிரடி நடவடிக்கைகளால் நீட் கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளது.
அரசுப்பணியில் உள்ள ஒரு ஜூனியர் எஞ்சினியர், கோச்சிங் சென்டர் ஆட்கள் என 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
56 வயதான ஜூனியர் பொறியாளர் சிக்கந்தர் குமார் இது தொடர்பாக கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.
“எனது அரசாங்க அலுவலகத்துக்கு நித்திஷ், அமித் ஆனந்த் இருவரும் வந்தனர். இன்னும்சிலருடன் சேர்ந்து நீட் கேள்வித்தாளை கைப்பற்றி, விற்பனை செய்வது பற்றி திட்டமிட்டோம்.

தேர்வு மய்யங்களுக்கு வினாத்தாள் கொண்டுவ ருபவர்களுக்கு காசு கொடுத்து, ஒரு நாள் முன்னதாக வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.
32 லட்சம் ரூபாய் கொடுத்த மாணவர்களை பாட்னாவில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றோம்.
அங்கே வினாத்தாளுடன் சரியான விடைத்தாளை யும் அந்த மாணவர்களுக்கு கொடுத்து மனப்பாடம் செய்யவைத்தோம். இப்படி மனப்பாடம் செய்துகொ ண்டஅனைத்து மாணவர்களும் அடுத்த நாள் நடந்த நீட் தேர்வில் எளிதாக மார்க் வாங்கிவிட்டனர்.” இவ்வாறு கூறினார்.
சிக்கந்தர் குமார் கொடுத்த வாக்கு மூலம் தற்போது ஊடகங்களின் கைகளுக்கு வந்துவிட்டது.
ஆனாலும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் எந்தவித தவறும் நடக்கவே இல்லை என்று பச்சையாகப் பொய்பேசி வருகிறார்.
நீட் ஊழலுக்குப் பொறுப்பேற்க வேண்டிய பிரதமர் மோடி, இந்தியா உறுப்பினராகவே இல்லாத ஜி7 நாடுகளின் கூட்டத்தில் அழையா விருந்தாளியாகப் போய் கலந்துகொண்டு ஊர்சுற்றித் திரிகிறார். தமிழ்நாட்டு பா.ஜ.க. வினரரும் வாயில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு வாயே திறக்காமல் மக்களை ஏமாற்றித் திரிகின்றனர்.

நீட் அநீதி தேர்வுக்கு எதிராக பல ஆண்டுகளாக தி.மு.க. வினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போது இந்த கோரிக்கை ஒட்டு மொத்த இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.
சிரமப்பட்டு படித்து நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவச் செல்வங்களின் எதிர்காலம் சிதைக்கப் பட்டுள்ளது. மருத்துவக் கல்வி என்ற உன்னதமான கல்வி, மாபியாக்களின் கைகளிலும் மாபியாக்களுடன் ஒத்துழைக்கும் ஒன்றிய அரசின் கைகளிலும் சிக்கிக் கொண்டிருப்பது வேதனையான உண்மை…!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *