அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதைத் தடுக்கவே நீட் தேர்வு முறைகேடு!

1 Min Read

காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 15- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூலமும், தேசிய தேர்வு முகமை மூலமும் நீட் தேர்வு ஊழலை மோடி அரசு மூடி மறைக்க தொடங்கி உள்ளது.

வினாத்தாள் கசியவில்லை என்றால், பீகாரில் வினாத்தாள் கசிவுக்காக 13 பேர் கைது செய்யப்பட்டது ஏன்?. வினாத்தாள் விற்பனையில் ஈடு படும் கல்வி மாபியாவுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம்வரை கொடுக்கப்பட்டதை பாட்னா காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அம்பலப்படுத்தியது.

அதுபோல், குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் நீட் தேர்வு மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. பயிற்சி மய்யம் நடத்திய ஒருவர், ஒரு ஆசிரியர், மற்றொருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்ற வாளிகளுக்கிடையே ரூ.12 கோடி பரிமாற்றம் நடந்ததை குஜராத் காவல்துறை கண்டுபிடித்தது.

மோடி அரசு சொல்வதுபோல், வினாத்தாள் கசியவில்லை என்றால், இந்த கைது நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது?.
தகுதியான மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படிப்பதை தடுப்ப தற்காகவே வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் மற்றும் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக தோன்றுகிறது.
– இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *