ஜஸ்டீஸ் கே.சாமிதுரை மறைவு கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்

1 Min Read

அரசியல்

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரும், சமூக நலத் தொண்டிலும், தொண்டறத்திலும் இடையறாத ஆர்வம் காட்டிய பெருந்தகையாளருமான மாண்புமிகு ஜஸ்டீஸ் கே. சாமிதுரை (வயது 91) அவர்கள்  இன்று (30.8.2023) மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் துயரம் அடைகிறோம்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, சட்ட வல்லுநராகவும், இறுதிவரை சமூகநீதிக்காக உறுதியுடன் பாடுபட்ட வருமான ஜஸ்டீஸ் அய்யா அவர்கள் எவரிடத்திலும் அன்புடனும், பண்புடனும் பழகும் பான்மையாளராவார்.

மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்திறப்பு நிகழ்வு பெரியார் திடலில் நடைபெற்ற போது அவரது உரை என்றும் மறக்க முடியாத ஆழமான சமூகநீதிக்கு விளக்கம் தந்த வீரவுரையாக அமைந்திருந்தது.

அவரை இழந்து வாடும் அவரது அன்புச் செல்வர் ஜஸ்டீஸ் கே.எஸ். மணிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி. வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
30.8.2023

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *