சிதம்பரத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

1 Min Read

சிதம்பரம், ஜூன் 5- சிதம்பரம் காந்தி சிலை அருகில் 7.5.2024 அன்று மாலை 6 மணிக்கு, குடிஅரசு – சுயமரியாதை இயக்க நற்றாண்டு விழா தெருமுனைக்கூட்டம், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன் வரவேற்புரையாற்றினார்.

மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், மாவட்ட ப.க. தலைவர் கோ. நெடுமாறன், மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலர் வி.எம்.சேகர், நகர மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் எஸ்.ராஜா ஆகியோர் உரை யாற்றியபின் – கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி சிறப்புரை யாற்றினார்.

நிகழ்ச்சியில் திருமுட்டம் ஒன்றியத் தலைவர் கு.பெரியண்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலர் தமீமுன் அன்சாரி, புவனகிரி அ.இராமலிங்கம், பெரியார் படிப்பக துணைத் தலைவர் ஆறு.கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *