சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் சென்னை மாநகர ஆணையர் வழங்கினார்

Viduthalai
1 Min Read

சென்னை, நவ. 27- சென்னை காவல்துறை யில் சிறப்பாக பணியாற் றிய காவல்துறை தேர்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, காவல் துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்து நற் சான்றிதழ் வழங்கி கவுர வித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த மாதம் சிறப்பாக பணியாற் றிய 35 காவலர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நற் சான்றிதழ் வழங்கி ஆணை யர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார். 

விரல்ரேகை பிரிவு கூடுதல் கண்காணிப்பா ளர் கலைகண்ணகி, காவல் கரங்கள் ஆய்வா ளர் மேரிராஜு, முக்கிய குற்றங்கள் பிரிவு ஆய்வா ளர் சிறீதர், மடிப்பாக்கம் ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் 10 சப்-_ஆய்வாளர் கள், 22 காவலர்கள் பாராட்டு சான்றிதழ் பெற் றோர் பட்டியலில் உள்ள னர். யானைகவுனி பகுதி யில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 கோடி பணத்தை ஆட்டோவில் கொண்டு வந்தவர்களை பணத்துடன் காவல் துறையில்  ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சுந் தர்ராஜையும் நேரில் அழைத்து ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கூடு தல் ஆணையர்கள் சுதாகர், கபில்குமார் சி சரத்கர் ஆகி யோரும் கலந்து கொண்ட னர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *