ஜம்மு-காஷ்மீர் 35 ஆண்டுகளில் இல்லாத அதிக வாக்குகள் பதிவு

1 Min Read

சிறீநகர், மே 29- கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜம்மு-காஷ்மீரில் அதிக பேர் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (27.5.2024) தெரிவித்தது.  2019 -ஆம் ஆண்டு தேர்த லுடன் ஒப்பிடுகையில் வாக்க ளித்தவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: அய்ந்து மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 58.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 2019-இல் இது 19.16 சதவீதமாக இருந்தது. 2024-இல் இது 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

மூன்று மக்களவைத் தொகுதிகளில் 50.86 சதவீதம் வாக்குகள் பதிவானது ஜனநாயக செயல்பாட்டின் மீது காஷ்மீர் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

சிறீநகரில் 38.49 சதவீதமும், பாரமுல்லாவில் 59.10 சதவீதமும், அனந்த்நாக்-ரஜொரி தொகுதியில் 54.84 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மீதமுள்ள இரு தொகுதிகளான உதம்பூர் மற்றும் ஜம்முவில் 68.27 சதவீதம் மற்றும் 72.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *