ஜூன் முதல் தேதி வரை தமிழ்நாட்டில் மழை வானிலை ஆய்வு மய்யம் தகவல்

viduthalai
1 Min Read

கொல்கத்தா, மே 27 வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்ன லுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சற்று குறைந் தாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வபோது வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மழை பகுதி களை ஒட்டிய மாவட்டங்கள், தென்மாவட் டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மாதம் (ஜூன்) 1ஆம் தேதி இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *